பிரான்சில் மாயமான ஈழத்தமிழர் கண்டுபிடிப்பு!

பிரான்ஸில் பாரிஸில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரீஸ் சங்கீதா அச்சக உரிமையாளரே இவ்வாறு கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். அதோடு குறித்த நபர்அண்மைக்காலமாக ஞாபகம் மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.